நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Friday 10 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 2 - தற்காப்பு



    சென்ற அத்தியாயத்தில் அமில கார சமநிலையை பற்றி விரிவாக பார்த்தோம்.  இந்த அத்தியாயத்தில் அவை நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை பார்க்கலாம்.

    அமில கார சமநிலை எவ்வளவு முக்கியம் என்றும், அதை உடல் சமநிலையில் வைக்க அதி தீவிர  ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் போன அத்தியாயத்தில் பார்த்தோம்.  அனால், உடலானது இந்த சமநிலையை ஏன் இவ்வளவு தீவிரமாக பேணிகாக்க வேண்டும்..?  காரணம் உள்ளது.  


    நம் உடலானது பல கோடி செல்களை கொண்டு உருவாகி உள்ளது.  ஒவ்வொரு செல்லும் உயிர்ப்புடன் இருந்தால்தான் நாம் உயிர்ப்போடு இருக்க முடியும்.  இதில் செல்களை உயிர்ப்புடன் பார்த்துக்கொள்வதில் ரத்தம் மிகப்பெரும் பங்கை வகிக்கிறது.  முன்னரே நாம் பார்த்திருக்கிறோம் ரத்தமானது சற்று கார தன்மை கொண்டது (pH).  எப்போது ரத்தமானது காரதன்மையில் இருந்து சற்று அமில தன்மையை அடைகிறதோ அப்போதுதான் உடலின் சமநிலை பாதிக்க ஆரம்பிக்கிறது. உடலானது இந்த அமில நிலையை மீண்டும் கார நிலைக்கு கொண்டுவர தனது அனைத்து முன்னேற்பாடுகளையும் முடுக்கி விடுகிறது.  ஆரம்பத்தில் நமக்கு இதைபற்றி ஒன்றும் தெரிவதில்லை.  ஒரு கட்டத்தில் உடலானது வெளிப்படையான சில அறிகுறிகளை வெளியிட ஆரம்பிக்கிறது.  தலைவலி, தோல் பிரச்சனைகள், அலர்ஜி, ஜலதோஷம், ஜுரம் போன்றவை ஆரம்ப அறிகுறிகள்.  நாமோ இதை வியாதி என்று நினைத்து மருந்து சாப்பிட்டு அந்த அறிகுறிகளை நிறுத்திவிடுகிறோம்.  உண்மையில் நாம் நம் உடலை அதன் வேலையை செய்ய விடாமல் தடுத்திருக்கிறோம்.


    ஒரு கட்டத்தில் இந்த அமில நிலை இன்னும் மோசமாக போகும்போது மிக மோசமான நிலைமை உருவாகிறது.  தைராய்டு, அட்ரினல், கல்லீரல் மேலும் பல உள்ளுறுப்புகள் தனது உச்சகட்ட திறனை விட மிக மிக குறைவாக செயல் பட ஆரம்பிக்கிறது.   அமில நிலை இன்னும் மோசமாக போனால், உடலின் பிராணவாயுவின் அளவு குறைய தொடங்கும்.  வளர்சிதை மாற்றம் தடைபடும், செல்கள் இறக்க தொடங்கும்.  உடல் மரணத்தை நோக்கி வேகமாக நகரும்.


“அதான் உடம்பு இதெல்லாம் தானா பாதுக்குமே அப்பறம் என் இந்த பிரச்சன வருது..?”


    ஆம், உடல் சமநிலைக்கான முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்கிறது.  அமில நிலையை சமன் செய்ய, உடல் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் கார கனிமங்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம் போன்றவற்றை எடுத்து அமில நிலையை சமன் செய்ய முயற்சிக்கிறது.  ஒரு கட்டத்தில், இந்த கனிமங்கள் தீர்ந்தவுடன் உடலின் எலும்புகள், தசைகளில் இருந்து இவற்றை எடுத்து பிரச்சனையை சரி செய்கிறது.  இந்த நிலையில்தான் நமக்கு உடலில் வைட்டமின்கள், கனிமங்கள் குறைபாடு ஏற்படுகிறது.  மேலும் தொடக்க அறிகுறிகள் தோன்றுகின்றன.


    இவை அனைத்தும் பிரச்சனையின் தொடக்கம் தான்.  ஒரு கட்டத்தில் கார கனிமங்கள் உடலில் தீர்ந்தவுடன், உடலானது அமில கழிவை வேறு வழி இல்லாமல் திசுக்களில் சேமிக்க தொடங்குகிறது.  இந்நிலையில் நமது சிறுநீரகமும், கல்லீரலும் இதை சரி செய்ய அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்கிறது.  இப்போது இந்த நிலைய சரிசெய்ய நம் வெள்ளை அணுக்கள் களத்தில் குதிக்கின்றன, இந்நிலையில் உடலில் (inflamatoin) வீக்கம், அழற்சி, தடிப்பு ஆகியவை உருவாகிறது.


    மேலும் அமில நிலை அதிகரிக்கும் போது உடல் வேறு வழி இல்லாமல் அவற்றை உடலின் உள்ள இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல், மார்பு பகுதி, வயிற்றில், தொடையில், இடுப்பில்,  மூளையில் கொண்டு சேர்க்கிறது. இதற்க்கு பெயர்தான் முதுமையடைதல்…!


    இந்த அமில பெருக்கம் நமக்குத்தான் பிரச்சனையே தவிர வேறு ஒருத்தருக்கு மிகவும் குதூகலமான விசயம்.  யார் என்று யோசிக்கிறீர்களா…?  அவர் வேறு யாரும் இல்லை, நுண்ணுயிர்கள்தான்…!  அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாக பார்ப்போம்.
- மருத்துவம் தொடரும்


Tuesday 7 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 1 - சமநிலை


ஆரோக்கியம் என்பது உடலின் சமநிலையை பொருத்தது.  பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே சமநிலையில் இருப்பதால்தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது.  அதேபோன்று நம் உடலிலும் ஒரு மாபெரும் பிரபஞ்சம் உயிர்ப்போடு இயங்கி கொண்டிருக்கிறது.  உடலின் சமநிலை பாதிக்கும் போது நம் உடலில் உள்ள பிரபஞ்சமும் தன் சமநிலையை இழக்கிறது, விளைவு, நோய் தொற்று, சோர்வு, சிந்தனை தேக்கம், உடல் எடை அதிகரிப்பு, உடல் வலி, செரிமான கோளாறு போன்ற மேலும் பல பிரச்சனைகள் உருவாகின்றன.


நவீன வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் நமது உடல் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கின்றன.  இதன் விளைவாக நீரிழிவு, புற்று நோய் மற்றும் இருதய கோளாறு போன்றவை நமக்கு பாரிசாக கிடக்கிறது.  தமிழ் நாட்டில் இந்த மூன்று நோயிகளும் மிக பிரபலம்.  இதற்க்கு உணவை மட்டும் குறை சொல்வது சரியாகாது அதற்க்கு பின் உள்ள உணவு அரசியலையும் நாம் கவனிக்க வேண்டும்.  


நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம்.  அனால் நாம் இறக்கும் வரை ஆரோக்கியத்துடன் உயிர்ப்போடு வாழ நம் அனைவருக்கும் உரிமை உள்ளது.  சரி விசயத்திற்கு வருவோம்.  நீங்கள் எத்தகைய ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்தாலும் சரி.  உங்களுக்கு எத்தகைய வியாதிகள் இருந்தாலும் சரி.  உங்கள் கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரையின் அளவு, ஹோர்மோன் பிரச்சனை மேலும் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் அனைத்தையும் மறந்துவிடுங்கள்.  ஆம்..! உடனே மறந்து விடுங்கள்.  நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு அம்சம் உங்கள் உடலின் அமில கார (pH) சமநிலை மட்டுமே…!

அது என்ன அமில கார சமநிலை? கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அமிலம் மற்றும் காரத்தின் அளவீடானது 0 தில் இருந்து 14 வரை இருக்கும்.  ஒரு திரவத்தின் pH (அமில கார செறிவு) அளவு 7 ஆக இருந்தால் அது ஒரு நடுநிலை திரவம்.  அதாவது அந்த திரவம் அமிலமும் அல்ல காரமும் அல்ல.  மாறாக pH மதிப்பு 7 க்கு கீழே இருந்தால் அந்த திரவம் ஒரு அமிலம்.  அதுவே 7 க்கு மேலே இருந்தால் அது ஒரு காரம்.  

நம் உடலிலும் இந்த அமில கார செறிவானது (pH) உள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான pH மதிப்பை கொண்டிருக்கும். இவை அனைத்திலும் முக்கியமானது ரத்தத்தின் pH அளவு ஆகும்.  ஆரோக்கியமான உடலில் ரத்தத்தின் pH ஆனது 7.3 இலிருந்து 7.4 என்ற அளவில் இருக்கும்.  நமது உடலின் வெப்பநிலை எவ்வாறு சமநிலையில் உள்ளதோ அந்த அளவிற்கு நமது ரத்தத்தின் pH சமநிலையில் இருக்கவேண்டும்.  இதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் சமநிலையை நிலைநிறுத்த மிகவும் உச்சகட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.  எடுத்துகாட்டிற்கு, நமது எலும்பை உருக்கி அதைக்கொண்டு கார தன்மையை ரத்தத்தில் அதிகரிக்கும்.


“என்னப்ப காரம்னு சொல்ர அமிலம்னு சொல்ர pH னு சொல்ர இது என்ன அவ்ளோ important ஆ…??”


pH அளவானது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும், பல்வேறு விதமான சீரங்களையும் நேரடியாக பாதிக்கிறது.  மேலும் நம் உடலின் ஒட்டுமொத்த வளர்சிதைமாற்றமும் உடலின் காரத்தன்மையை பொறுத்தே அமைகிறது.  உடலின் அமிலத்தன்மை மிக மோசமான நிலையை அடைந்தால் செல்கள் அழிய தொடங்குகின்றன.  இந்நிலையை கவனிக்காமல் விட்டால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் தடைபட ஆரம்பிக்கும்.  இதய துடிப்பு முதல் மூளையின் நரம்பு சமிக்ஞைகள் வரை பாதிக்கபடும். வேறு மாதிரி சொல்ல வேண்டுமானால் மரணம் சம்பவிக்கும்…!


இங்கு மோசமான நிலைமை என்னவென்றால் நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, பொங்கல், வடை, பரோட்டா, அரிசி, சாம்பார், சிக்கன், மட்டன், முட்டை மற்ற அனைத்து வேகவைத்த உணவுகளும் உடலுக்கு அமில தன்மையை தருகின்றன.  நம் உடல் சமநிலையை காக்க படாத பாடு பட்டுகொண்டிருக்கிறது.


“உடம்பு எல்லாத்தையும் தானே சரிபன்னிக்கும்னு சொல்ற, ஆனா ஒரு ஜுரம் வந்தா கூட தானே சரி ஆகமேட்டேன்குது”  போன்ற வரிகளை பலமுறை மக்கள் கூற கேட்டிருக்கிறேன்.  அவர்கள் மேல உள்ள பத்தியை இன்னொரு முறை படிக்க வேண்டுகிறேன்.


“ரைட்டு.. எதோ வைரஸ், பாக்டீரியா, மலேரியா, சிக்குன்குனியா, கேன்சர் அப்படின்லாம் first part ல சொன்னியே அது எங்க..?”


இதற்க்கான பதிலை சிறிது சிறிதாக அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


- மருத்துவம் தொடரும்

Monday 6 March 2017

தற்சார்பு மருத்துவம் - அறிமுகம்


வணக்கம்..! “என்ன இது தற்சார்பு மருத்துவம்” என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இந்த கட்டுரையின் முடிவில் அதற்கான விடையை என் பார்வையில் தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். மனித உடல் என்பது பல லட்சம் பரிணாம வளர்ச்சியின் உச்சம். குறிப்பாக மனித நரம்பு மண்டலம் மற்ற விலங்குகளை காட்டிலும் அபரிமிதமான வளர்ச்சி கொண்டது. இத்தகைய அற்புதமான ஒரு இயந்திரம் மேலும் ஒரு குறிப்பிட தகுந்த அம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது அதுதான் தன்னை தானே சரிசெய்து கொள்ளுதல். குறிப்பிட்ட சில உறுப்புகளை தவிர்த்து மனித உடலானது தனது அனைத்து செல்களையும் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பதில் நீங்கள் என்னுடன் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு இருப்பின் ஏன் சிறுநீரகம் செயலிழப்பு, இருதய கோளாறு முதலியவை ஏற்படுகின்றன? வினோதம்…!
     உடலில் இன்னும் ஒரு அற்புதமான அமைப்பு உள்ளது அதுதான் தற்காப்பு அல்லது நோய் எதிர்ப்பு. என்னை பொருத்தமட்டில் இந்த தற்காப்பு அமைப்பிற்கு ஈடு இணை இல்லை. இதனால் எத்தகைய நோய் கிருமிகளையும் எதிர்த்து போராடி உடலை பாதுகாக்க முடியும். இருப்பினும், கேன்சர், எய்ட்ஸ், மலேரியா, டைபாய்டு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் மனித உடலை தாக்கி மரணத்தையும் விளைவிக்கின்றன. எப்படி இது சாத்தியம்?
    சரி, நோய் வந்தவுடன் நாம் அதற்காக சில மருந்துகளை சாப்பிடுகிறோம் அவை உண்மையில் நோயை குணப்படுத்துகிறதா? இந்த கேள்விக்கு நாம் “ஆம்” என்று பதில் சொன்னால், உடலை பற்றிய கவனமும், அடிப்படையும் நாம் மிகவும் குறைவாக கொண்டுள்ளோம் என்பதாகும்.
“இவ்ளோ பேசுறியே உனக்கு இதெல்லாம் தெரியுமா??”
என்று நீங்கள் கேட்பது எனக்கு தெளிவாக கேட்கிறது 🙂 .. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களின் ஒரு வாக்கியம்,
“If I have seen further, it is by standing on the shoulders of giants”
– Albert Einstein
தமிழில்,
“எனது தற்போதைய கண்டுபிடிப்புகளுக்கு காரணம் எனது முன்னோர்களின் முந்தைய கண்டுபிடிப்புகள்”
“ரைட்டு ஓகே, ஆனா இத ஏன் எங்ககிட்ட சொல்ற??”
     உங்கள் குரல் மீண்டும் தெளிவாக கேட்கிறது 🙂 . நாம் அனைவரும் நம் வாழ்வில் பல விசயங்களை கற்கிறோம். அதை நம்மோடே வைத்துவிட்டோம் எனில் நம் அடுத்த தலைமுறை மீண்டும் ஆரம்ப புள்ளியில் இருந்து தொடர வேண்டி இருக்கும். நீங்கள் கற்றது, சோதித்தது, உணர்ந்தது, புரிந்தது மேலும் உலகத்தின் மீதான உங்கள் பார்வையை ஆவணப்படுத்துங்கள். உங்கள் தலைமுறை உங்கள் முடிவில் இருந்து தொடங்கட்டும். ஆகையால் சொத்து சேர்பதுடன், அறிவு செல்வத்தையும் சந்ததிக்கு கொடுக்க முயற்சிப்போம்.
     பீடிகை போட்டது போதும் விசயத்துக்கு வருவோம். இந்த தொடர் பதிவில் உடல் & மருத்துவம் பற்றி நான் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர விரும்புகிறேன். என்னுடைய இந்த தேடலில் பல வியப்பான உண்மையை அறிந்ததுடன் அவற்றை நான் என்மேல் சோதனையும் செய்து பார்த்து உணர்திருக்கிறேன்.
“அதெல்லாம் இருக்கட்டும் இந்த கட்டுரையை நான் ஏன் படிக்கணும்??”
— உங்கள் Health Insurance ரத்து செய்ய
— உடல் ஆரோக்கியத்துடன் வாழ
— நோய் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ
“இந்த மாதிரி சொல்றவன்களாம் ஒரு சாதாரண ஜுரத்தை கூட உடனடியாக சரி செய்ய மாட்டாங்க”
— சாதரண ஜுரம் மட்டும் அல்லாமல் கேன்சர், மலேரியா, அனைத்து விதமான வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் மற்றும் பல நோய்களிலிருந்து தேறுவதற்க்கான நான் அறிந்து கொண்ட வழிமுறைகளை இங்கேப் பகிர உள்ளேன்.
     அது மட்டும் அல்லாமல், உடலின் அடிப்படை செயல்பாடுகளை பற்றியும் ஆராய்ந்து பகிர உள்ளேன். நான் இங்கு பகிரப் போகின்ற தகவல்கள் பல, நூல்களின் மூலம் நான் கற்றது.  இந்த தொடர் பதிவு, வெறும் பதிவாக மட்டும் அல்லாமல், அனைவரின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் விதமாக அமையும் என நம்புகிறேன்.
– மருத்துவம் தொடரும்

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?


30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி?
இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய ஒருவர் தான் விவசாயி அர்ஜூன் அவர்கள்.
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்” என்கிறார் அர்ஜுனன்.
.
90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
# பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
# ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
# கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
# நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
# வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி என்கிறார் அர்ச்சுனன்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்” என்கிறார் அர்ஜுனன். அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449)
.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449)

புன்னை ஒரு அதிசியம்


விவசாயிகளுக்கான ஓர் நற்செய்தி.
டீசலோடு போட்டி போடும் புன்னை…!
நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவிர விவசாயி ராஜசேகர். மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை…!” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புன்னை எண்ணெய் புண்ணியத்தால்….!
“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறு வாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல.70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.
“5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய் தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.
ஒரு லிட்டர் டீசலோட விலை 56 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது.
மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 4200 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொல்கிறார் ராஜசேகர்.
தொடர்புக்கு:அலைபேசி எண்: 9751002370.
{கிடைத்த செய்தியை பகிர்ந்துள்ளேன் அனேகமாக யாருக்கேனும் உபயோகமாகலாம்.}