நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Sunday 14 May 2017

நானும் அல்சரும்..! - முடிவு



சென்ற அத்தியாயத்தில் நெஞ்செரிச்சலினால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி பார்த்தோம். அந்த அத்தியாயத்தை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துவிடுங்கள்.  ஏனெனில் இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி ஆகும்.


“எல்லாம் படிச்சாச்சி நி விசயத்துக்கு வா..”


இதோ வந்துட்டேன் :-).  போன அத்தியாத்தை நாம் ஒரு முக்கியமான தடயத்தோடு முடித்திருந்தோம்.  அந்த தடையம் வேறு ஒன்றும் இல்லை நாம் சாதரணமாக குடிக்கும் மோர்..!


“சரிப்பா அத வச்சி என்ன புரிஞ்சிக்கிட்ட..?”


சொல்கிறேன் அதற்க்கு முன்பு அய்யா நம்வாழ்வரின் ஒரு கருத்தை கூற விழைகிறேன்.  பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளை எதிர்க்க நன்மை செய்யும் பூச்சிகளும் நம் பயிர்களின் ஊடே எப்போதும் இருக்கிறது என்று கூறி உள்ளார்.  இத்தகைய சமநிலையானது இயற்கையில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.  


“அதுக்கும் மோர்க்கும் என்னயா சம்பந்தம்..?”


மேலே படியுங்கள்.  என் முதல் தடயத்தையும், அய்யாவின் அந்த கூற்றையும் பொருத்திப்பார்க்கும் போது என்னால் ஒரு விஷயத்தை உணரமுடிந்தது.  என் வயிற்றில் மோர் குடிக்கும்போது நெஞ்செரிச்சல் குறைகிறது எனில்.  மோரில் உள்ள எதோ ஒன்று என் வயிறை சமநிலைக்கு கொண்டுவருகிறது.  சரி மோரில் என்ன இருக்கிறது என்று யோசித்தால், அதில் இருப்பது உடலுக்கு நன்மை செய்யும் நுண்யுரிகள்.  சரி,  மோர் குடித்தாலும் சில மணிநேரங்கள் கழித்து மீண்டும் நெஞ்செரிச்சல் வர காரணம் என்ன….?????


நன்மை செய்யும் நுண்ணுயிர்களால் எனக்கு சற்று நிவாரணம் கிடைக்கிறது எனில், என் வயிற்றில் தீமை செய்யும் நுண்யிர்களால் மீண்டும் எனக்கு நெஞ்செரிச்சல் உருவாகிறது என்று தோன்றியது..!  இதோ இந்த எண்ணம்தான் என் முழு தீர்விற்கு ஆதாரமானது.


“பில்ட்டப் போதும்,  மேல சொல்லு…”


ரைட்டு ஓகே :-) மேற்கொண்டு போவதற்கு முன்பு,  நான் நெஞ்ஜெரிச்சளுக்காக ஒருமுறை அலோபதி மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் அங்கு அவர்கள் என்னை கேட்ட கேள்விகள்.  


கேள்வி: உங்களுக்கு stress அதிகமா இருக்க?
பதில்: அப்படினா என்ன?
கேள்வி: நீங்க junk food சாப்பிடுவிங்கள?
பதில்: அப்படினா என்ன?
கேள்வி: நீங்க காரமா சாபிடுவிங்களா?
பதில்: இல்லை


இம்மாதிரி கேள்விகள் சென்றது. உண்மையில் மன அழுத்தம், மசாலா உணவுகள் நமக்கு நெஞ்ஜெரிச்ச்சலை தருவதில்லை.  நமக்கு நெஞ்செரிச்சல் வர காரணம் நம் வயிற்றில் போதுமான ஜீரண அமிலம் இல்லை….!  


“அது எப்படி வயித்துல ஆசிட் கம்மி ஆச்சி…?”


மிகச்சரியான கேள்வி…!  பதில்…. Helicobacter Pylori…


“அப்படினா..?”


Helicobacter Pylori என்பது ஒருவகை பாக்டிரியா.  இந்த நுண்ணுயிரி தான் எனது அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் காரணம்.  இந்த பாக்டிரியாவானது நம் வயிற்றின் கோழை படலத்தின் உள்ளே சென்று அங்கிருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சம்மாக நம் வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கும்.  இதற்க்கு காரணம் இதனால் நம் வயிற்றின் அமிலதன்மையில் வாழ முடியாது.  தான் வாழ்வதற்கு ஏற்றவாறு அமோனியா என்ற காரத்தன்மையை நம் வயிற்றில் உற்பத்தி செய்து கலக்கிறது.  இதனால் நம் வயிற்றின் அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கிறது.  இந்த காரதன்மையில்தான் மற்ற நுண்ணுயிரிகள் செழித்து வளரும்.  ஆகையால் ஒரு பெரும் நுண்ணுயிரிகளின் கூட்டமே நம் வயிற்றில் தொற்றுகிறது.  இந்த நிலையில் நாம் என்ன சாப்பிட்டாலும் அது அந்த நுண்ணுயிரிகளால் நொதித்து அதன் மூலம் காற்று அழுத்தம் ஏற்பட்டு நாம் உண்ட உணவு நம் வாய்க்கு திரும்ப மேலெழும்புகிறது…!!!  இது கிட்டத்தட்ட நம் தோசை மாவை புளிக்க செய்வதற்கு இணையானது.


இந்த நிலையில் நாம் எவ்வளவுதான் ஆரோக்கியமான உணவை உண்டாலும் அது ஒழுங்காக செரிக்காது இதன் விளைவு நம் உடலில் மிகபெரிய அளவில் உட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது.  மிக குறிப்பாக வைட்டமின் பி குறைபாடு ஏற்படுகிறது.  இது மிக பெரிய பிரச்சனை காரணம் நம் உடலால் வைட்டமின் பிஐ மற்ற வைட்டமின்களை போன்று கல்லீரலில் சேமிக்க முடியாது.  ஏனெனில் இது நீரில் கரயகூடிய வைட்டமின்.  நம் உடலில் உண்ட உணவு செரிப்பதர்க்கும் அது சிறு சிறு அமினோ அசிட்களாக மாறுவதற்கும் வைட்டமின் பி தான் அடிப்படை.  உடலின் சக்தி பெருக்கத்திற்கும் இதுவே அடிப்படை.  இப்போது நம் முதல் அத்தியாயத்தில் படித்த அறிகுறிகளை நினைத்து பாருங்கள் அனைத்தும் ஒத்துபோகும்..!


“இவ்ளோ விசயம் இருக்கா இதுல..  சரி அப்புறம் என்ன பன்ன..?”


இந்த விசயங்களை எல்லாம் நான் அறிய எனக்கு மிக முக்கியமான அடுத்த தடயமாக அமைந்தது எழுமிச்சை பழம்..?  நான் சிறுவயதில் இருந்தே நிறைய எலுமிச்சை ரசம் குடிப்பேன்.  என் வயிறு பிரச்னைக்கு பிறகு நான் எலுமிச்சை ரசம் குடித்தால் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அடுக்கு தும்மல் வந்துவிடும்.  இந்த தடயத்தை வைத்து ஆராயும்போது தான் இது வைட்டமின் பி குறைபாடால் வருவது என்று அறிந்தேன்.  அந்த விவரத்தை இங்கே (http://www.chiark.greenend.org.uk/~vclarke/citric.html) அறியலாம்.  இவ்வாறு இதையும் H. Pylori ஐயும் சம்பந்தபடுத்த முடிந்தது.  


எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.  அப்போது நான் வாழை பயிற்சி பட்டறையில் உறங்கிகொண்டிருந்தேன் நேரம் அதிகாலை 2 மணி.  மூக்கில் இருந்தது ஒரே சளி தும்மல். வேறொன்றும் இல்லை காரணம், முந்தைய நாள் காலை வகுப்பில் lemon juice :-) ஒரு குவளை அருந்தி இருந்தேன்.  வெறுத்துபோய் எழுந்து இணையத்தில் தேடும்போதுதான் மேலே குறிப்பிட்ட அந்த இணைப்பு கிடைத்தது.  அதற்க்கு முன்பு பலமுறை தேடியும் கிடைக்காத பதில் அன்று இரவு கிடைத்தது.  ஏனோ அன்று முதல் மனித பிறப்பின் நோக்கமே தன்னை அறிதல் என்று தோன்ற ஆரம்பித்தது.


“மொக்க போடாத.. விசயத்துக்கு வா…”


ஓகே... ஓகே… உடனே மறுநாள் காலை எழுந்து B complex மருந்து வாங்கி சாப்பிட்டேன். விலை 1 ரூபாய்.  அதிசயம் அடுத்த 1 மணி நேரத்தில் தும்மல் காணமல் போனது. உடலில் சக்தி கூடுவதை உணர்தேன்.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  சரி உடனடி தீர்வை கண்டாயிற்று ஆனால் அடிப்படை பிரச்சனை இன்னும் அப்படியே இருக்கிறதே, அதாங்க நம்ம H. pylori.


வாசகர்களை கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அய்யா நம்வாழ்வாரின்
கூற்றை நினைவுபடுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.  இந்த H. Pylori ஐ antibiotics மருந்துகள் மூலமும் அழிக்க முடியாது.  நானே அதற்க்கு உதாரணம்.  நான் amoxi, PPI போன்ற மருந்துகளை சோதனை அடிப்படையில் மிக மிக குறைந்த நாட்களே சாப்பிட்டு இருக்கிறேன்.  அனால் நிவாரணம் இல்லை.  அப்போதுதான் மோர் பற்றிய நியாபகம் வந்தது.   ஆக இந்த கிருமியை ஒழிக்க வேண்டுமானால் நாம் மாற்று கிருமியின் மூலமே அதை சாதிக்க முடியும் என்று தோன்றியது.  இந்த பார்வையில் தேடும்போதுதான் எனக்காகவே தயாரித்தது போன்ற ஒரு மருந்து கிடைத்தது அதற்க்கு பெயர் pylopass (probiotic).  இந்த மருந்தானது Lactobacillus reuteri என்ற உடலுக்கு நன்மை புரியும் நுண்ணுயிரியை மிக அதிக அளவில் கொண்டுள்ளது.  இதை இணையத்தில் இருந்து வங்கினேன்.  மறுபடியும் அதிசயம் என் நெஞ்செரிச்சல் மூன்றே நாட்களில் மிக பெரிய அளவில் குறைந்தது.  தொடர்ந்து 30 நாட்கள் அந்த மருந்தை எடுத்தேன் முழு நிவாரணம் கிடைத்தது.  அந்த மருந்தை நிறுத்தி கிட்டதட்ட 30 நாட்களுக்கு மேல் ஆகிறது.  இதுவரை நெஞ்செரிச்சல் வரவில்லை.  அனைத்து உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக்கொண்டு வருகிறேன்.


என்னதான் கிருமியை ஒழுத்துவிட்டலும், என் வயிறானது தனது ஒட்டுமொத்த சக்தியை இழந்து இருந்தது.  அனால் இந்த நேரத்தில் வயிற்றை பலபடுத்தும் உணவுகளான பாகற்காய், முருங்கை, திரிபாலா சூரணம் முதலியவற்றை எடுக்க ஆரம்பித்தேன்.  அதிசயம் அனைத்தும் இப்போது ஒழுங்காக செரித்து மிக நல்ல பலன்களை தந்தன.  தற்போது என் வயிறு என்ன சொல்கிறதோ அதுவே எனக்கு வேத வாக்கு.  அது பசி என்றால் மட்டுமே உண்கிறேன்.  அதுவும் போட்டிபோட்டு கொண்டு உணவுகளை அரைத்துதள்கிறது.  என் சிறுவயதில் நான் இருந்த சக்தி நிலைக்கு மிக வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறேன்..!


  • ஆய்வு சிறப்பாக முடிந்தது நன்றி…!

0 comments:

Post a Comment