நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 26 July 2016

கேழ்வரகு மோர்க்கூழ்



தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு       - ஒரு கைப்பிடி
புளித்த மோர்            - தேவையான அளவு
கடுகு                            - அரை தேக்கரண்டி
சீரகம்                           - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை        - சிறிது
உப்பு, நல்லெண்ணெய்  - தேவையான அளவு.
செய்முறை:
கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்,அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்ததும் மாவுக் கரைசலையும் ஊற்றி நன்கு கலக்கவும்.மாவு வெந்து கூழ் பதத்திற்கு கெட்டியாக வந்த உடன் இறக்கவும்.
இதில் ஆரிய உடன் மோர், உப்பு சேர்த்து கரைத்துக் கொண்டால் மோர் கூழ் தயார்
மேலும் சுவை சேர்க்க நல்லெண்ணெயில் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து மோர் கூழ் உடன் சேர்த்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment